Pages

29 December 2009

உயிரின் உஷ்ணம்


விலக்கிட முடியாத
துன்பம் நீ
துன்பமான இன்பம்

துயில முடியாத
பரவசம் நீ....
பரவசமான பேரின்பம்

காணமுடியாத காட்சி
காட்சிகளில்
அழகிய மிரட்சி !

உறவுகளின் அர்த்தம் நீ
அர்த்தப்படுத்தினாலும்
அற்புதம்...

வாயசைத்தால்
முத்தமிழ்
முத்தமிழில்
கடைந்தெடுத்த
தேன் துளி

தேன் துளியான
தூரல் நீ
தூரலாய் பொழிந்து
உயிரை உருக்கிட்ட
உஷ்ணம் நீ !

No comments:

Post a Comment