
உன் உதடுகள்போல
பூக்களுக்கு ஏன்
பூக்கத் தெரியவில்லை
நீ பேசும்போது
கவியரசு கண்ணதாசன்கூட
கல்லறைவிட்டு எழுவான்
உன் குரல்கேட்டபின்
பாட மறுக்கும்
குயில்கள்
என் ரத்தத்தின்
இரண்டு அணுக்களும்
சந்திக்கும்போது
உன்னைப் பற்றித்தான்
பேசுகின்றன...
நான் என்ன மழையா
ஒதுக்கித் தள்ள
அல்லது ஒதுங்கிப் போக...
உன் உதட்டுக் கோப்பையில்
என்னை வீழ்த்தும்
ஒருதுளி விஷமா?
நீ நிராகரித்தால்
என் காதலில்
ஒருபாதி வீணாகும்
என்று எண்ணாதே
இருவருக்கும் சேர்த்து
நான் ஒருவனே
காதலித்து
கற்பூரம் ஏற்றுகிறேன் !
No comments:
Post a Comment