நீர் துளிகள் நிலம் விழுந்தால்
பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால்
மௌனம் கூட இசை அமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால்
கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும்
தாகம் இன்னும் அடங்கவில்லை
பாதம் இனைந்து நடக்கும்,
இந்த பயனத்தில் என்ன நடக்கும்?...
வானம் திறக்கும் வரைக்கும்
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்...
மழைத்துளி பனித்துளி கறைந்த பின்னே
அது மறுபடி இரண்டென பிரிந்திடுமா?....
No comments:
Post a Comment