Pages

31 May 2009

போ... விலகி விடு...

ஆயிரமாய் கதைகள்பேச
ஆசையோடு வந்தேன்
உன்னைக்கண்ட நேரமட்டும்
ஊமையாகிப் போனேன்

வண்டுவிழி பார்வையிலே
வசியமாகி நின்றேன் - உன்
சுண்டுவிரல் ஆணையிட்டால்
உயிரைக்கூடத் தருவேன்......

சின்ன்ச்சின்ன் சிரிப்பினுக்கே
ரசிகர்மன்றம் வைதேன் - நீ
வார்த்தைஓன்று சொல்லிவிடு
வானவில்லை வளைப்பேன்....

இல்லைஇல்லை என்றுசொல்லும்
மெல்லிடையின் காட்சி - என்னை
தொல்லைசெய்து போனதிலே
மனசுகெட்டுப் போச்சு.......

நிலவுமுகம் கனவில் வந்து
நித்திரையைக் கெடுக்கும் - ஆம்
களவுபோகும் இதயத்தையே
காவல் எங்கேத் தடுக்கும்.....

அழகுச்சிலை அருகில் வர
வீசுதொரு வாசம் - போ
விலகிவிடு இல்லையெனில்
களையும் எனது வேஷம்......

No comments:

Post a Comment