Pages

31 May 2009

உயிர் பிரிந்தாலும்

உயிர் பிரிந்தாலும்
உன்னை பிரியாத
வரம் ஒன்று பெற வேண்டும்
நிழல் பிரிந்தாலும்
நினைவுகள் சுமந்த
இதயத்தில் இடம் வேண்டும்
வாழும் வரையிலும் வழக்கமானது
விழிப்பும் தூக்கங்களே
வானவில்லென வந்து போவது
சுகமும் ஏக்கங்களே
சாயும் வரையிலும் சுவாசமானது
உறவெனும் பாசங்களே
நம்முடனே.....

காலை பொழுதாகி
என் கண்களை திறந்தவள் நீயே
நாளை நமதென்று
புது நம்பிக்கை விதை விதித்தாயே
விழிகளிளே வழி வகுத்தாய்
வேதம் புதிதாய் பார்த்தேன்
நுனிவிரலில் நூல் பிடித்தாய்
பட்டம் போல பறந்தேன்
உடல் கரைந்தேன்
உன் உயிர் கலந்தேன்
உலகத்தில் எனக்கேது புது வரமே.....

வாசல் படி மீது
புது வாசம் படிந்தது பூவே
ஆசை படும் போது
நெஞ்சிள் ஓசையை ஒளித்துக் கொண்டாயே
மறந்திருந்தால் இறந்திருப்பேன்
நீயும் நானும் வேறோ...
இணைந்திடவும் இனித்திடவும்
உன்னை அன்று யாரோ
வசப்படுவென் என்று வசித்திருப்பேன்
பசுமையின் வசியங்கள் வசந்தங்களே.....

No comments:

Post a Comment