முத்து முத்து மகளேமுகம் காணாத மகளே
மாதங்கள் பத்து
மனதினில் சுமந்து
கற்பனையில் பெற்ற கண்மனியே
நான் உனக்கு
கவிதையில் எழுதும் கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்
வானத்து மலரே
வையத்து நிலவே
வாழ்க்கையின் பொருளே வா
மலடியின் மகளே
மகள் என்னும் கனவே
மடியினில் மேல் நீ வா
பாறையில் மலர்ந்த தாமரையே
இரவினில் எழுந்த சூரியனே
எழாமளே எழும் நிலா நீயே
முண்ணுரு நாள் கற்பதிலே
வாராத பெண் நீயடி
என்னாலுமே நான் பொம்மைதாய்
என்றாலும் தாய் தானடி
உழாவும் வானம்பாடியே
பண்பாடி வாழ்க கண்ணே
புறாவை போல சாந்தமாய்
பன்பாடு போற்று பெண்ணே
நாள் ஒரு மேன்மை நீ பெறுமா
நான் பெற்ற இன்பம் யார் பெறுவார்
பெறாமளே பெறும் சுகம் நீயே
சிந்தாமணி என் கண்மணி
சிற்றாடை நீ கட்டடி
என் மாளிகை முற்றத்திலே
பொன்னூஞ்சல் நீயாடடி
குலாவும் அன்பு கோகிலம்
எங்கேயும் கானம் பாட
கனாவில் கூட சோம்பளே
இல்லாமல் ஞானம் தேடு
நல்லவளாக நடை போடு
வல்லவளாகிட தடையேது
விழாமளே விழும் மலை நீயே
பொல்லாதது உன் பூமி தான்
போராட்டம் தான் வாழ்வடி
கொல்லாமலே கொல்வாரடி
குற்றங்கள் சொல்வாரடி
வராத துன்பம் வாழ்விலே
வந்தாலும் நேரு மோது
பெறாத வெற்றி இல்லையே
என்றே நீ வேதம் ஓது
ஊமைக்கும் நாக்குகள் வேண்டுமடி
உரிமைக்கு போரிட தேவையடி
தொடாமலெ சுடும் கனல் நீயே........
No comments:
Post a Comment