உடல் வேண்டாம் - உள்ளம் போதும்
பணம் வேண்டாம் - பாசம் போதும்
புகழ் வேண்டாம் - புண்ணகை போதும்
நிழல் வேண்டாம் - உன் நிஜம் வேண்டும் !
31 May 2009
உயிர் பிரிந்தாலும்
உயிர் பிரிந்தாலும்உன்னை பிரியாத
வரம் ஒன்று பெற வேண்டும்
நிழல் பிரிந்தாலும்
நினைவுகள் சுமந்த
இதயத்தில் இடம் வேண்டும்
வாழும் வரையிலும் வழக்கமானது
விழிப்பும் தூக்கங்களே
வானவில்லென வந்து போவது
சுகமும் ஏக்கங்களே
சாயும் வரையிலும் சுவாசமானது
உறவெனும் பாசங்களே
நம்முடனே.....
காலை பொழுதாகி
என் கண்களை திறந்தவள் நீயே
நாளை நமதென்று
புது நம்பிக்கை விதை விதித்தாயே
விழிகளிளே வழி வகுத்தாய்
வேதம் புதிதாய் பார்த்தேன்
நுனிவிரலில் நூல் பிடித்தாய்
பட்டம் போல பறந்தேன்
உடல் கரைந்தேன்
உன் உயிர் கலந்தேன்
உலகத்தில் எனக்கேது புது வரமே.....
வாசல் படி மீது
புது வாசம் படிந்தது பூவே
ஆசை படும் போது
நெஞ்சிள் ஓசையை ஒளித்துக் கொண்டாயே
மறந்திருந்தால் இறந்திருப்பேன்
நீயும் நானும் வேறோ...
இணைந்திடவும் இனித்திடவும்
உன்னை அன்று யாரோ
வசப்படுவென் என்று வசித்திருப்பேன்
பசுமையின் வசியங்கள் வசந்தங்களே.....
எழுதுகிறேன் ஒரு கடிதம்
முத்து முத்து மகளேமுகம் காணாத மகளே
மாதங்கள் பத்து
மனதினில் சுமந்து
கற்பனையில் பெற்ற கண்மனியே
நான் உனக்கு
கவிதையில் எழுதும் கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்
வானத்து மலரே
வையத்து நிலவே
வாழ்க்கையின் பொருளே வா
மலடியின் மகளே
மகள் என்னும் கனவே
மடியினில் மேல் நீ வா
பாறையில் மலர்ந்த தாமரையே
இரவினில் எழுந்த சூரியனே
எழாமளே எழும் நிலா நீயே
முண்ணுரு நாள் கற்பதிலே
வாராத பெண் நீயடி
என்னாலுமே நான் பொம்மைதாய்
என்றாலும் தாய் தானடி
உழாவும் வானம்பாடியே
பண்பாடி வாழ்க கண்ணே
புறாவை போல சாந்தமாய்
பன்பாடு போற்று பெண்ணே
நாள் ஒரு மேன்மை நீ பெறுமா
நான் பெற்ற இன்பம் யார் பெறுவார்
பெறாமளே பெறும் சுகம் நீயே
சிந்தாமணி என் கண்மணி
சிற்றாடை நீ கட்டடி
என் மாளிகை முற்றத்திலே
பொன்னூஞ்சல் நீயாடடி
குலாவும் அன்பு கோகிலம்
எங்கேயும் கானம் பாட
கனாவில் கூட சோம்பளே
இல்லாமல் ஞானம் தேடு
நல்லவளாக நடை போடு
வல்லவளாகிட தடையேது
விழாமளே விழும் மலை நீயே
பொல்லாதது உன் பூமி தான்
போராட்டம் தான் வாழ்வடி
கொல்லாமலே கொல்வாரடி
குற்றங்கள் சொல்வாரடி
வராத துன்பம் வாழ்விலே
வந்தாலும் நேரு மோது
பெறாத வெற்றி இல்லையே
என்றே நீ வேதம் ஓது
ஊமைக்கும் நாக்குகள் வேண்டுமடி
உரிமைக்கு போரிட தேவையடி
தொடாமலெ சுடும் கனல் நீயே........
உறவுகள் !!!!
நினைத்தபோது அருகில்
இருப்பவர்களைவிட.....
உன் அருகில் இல்லாதபோதும்
உன்னை நினைத்துக்கொண்டிருப்பவர்கள்
உண்மையான் உறவுகள் !!!
இருப்பவர்களைவிட.....
உன் அருகில் இல்லாதபோதும்
உன்னை நினைத்துக்கொண்டிருப்பவர்கள்
உண்மையான் உறவுகள் !!!
போ... விலகி விடு...
ஆயிரமாய் கதைகள்பேச
ஆசையோடு வந்தேன்
உன்னைக்கண்ட நேரமட்டும்
ஊமையாகிப் போனேன்
வண்டுவிழி பார்வையிலே
வசியமாகி நின்றேன் - உன்
சுண்டுவிரல் ஆணையிட்டால்
உயிரைக்கூடத் தருவேன்......
சின்ன்ச்சின்ன் சிரிப்பினுக்கே
ரசிகர்மன்றம் வைதேன் - நீ
வார்த்தைஓன்று சொல்லிவிடு
வானவில்லை வளைப்பேன்....
இல்லைஇல்லை என்றுசொல்லும்
மெல்லிடையின் காட்சி - என்னை
தொல்லைசெய்து போனதிலே
மனசுகெட்டுப் போச்சு.......
நிலவுமுகம் கனவில் வந்து
நித்திரையைக் கெடுக்கும் - ஆம்
களவுபோகும் இதயத்தையே
காவல் எங்கேத் தடுக்கும்.....
அழகுச்சிலை அருகில் வர
வீசுதொரு வாசம் - போ
விலகிவிடு இல்லையெனில்
களையும் எனது வேஷம்......
ஆசையோடு வந்தேன்
உன்னைக்கண்ட நேரமட்டும்
ஊமையாகிப் போனேன்
வண்டுவிழி பார்வையிலே
வசியமாகி நின்றேன் - உன்
சுண்டுவிரல் ஆணையிட்டால்
உயிரைக்கூடத் தருவேன்......
சின்ன்ச்சின்ன் சிரிப்பினுக்கே
ரசிகர்மன்றம் வைதேன் - நீ
வார்த்தைஓன்று சொல்லிவிடு
வானவில்லை வளைப்பேன்....
இல்லைஇல்லை என்றுசொல்லும்
மெல்லிடையின் காட்சி - என்னை
தொல்லைசெய்து போனதிலே
மனசுகெட்டுப் போச்சு.......
நிலவுமுகம் கனவில் வந்து
நித்திரையைக் கெடுக்கும் - ஆம்
களவுபோகும் இதயத்தையே
காவல் எங்கேத் தடுக்கும்.....
அழகுச்சிலை அருகில் வர
வீசுதொரு வாசம் - போ
விலகிவிடு இல்லையெனில்
களையும் எனது வேஷம்......
யார் யாரோ
யார் யாரோ நான் பார்த்தேன் யாரும் எனக்கில்லை
என் வழியில் நீ வந்தாய்
நானும் எனக்கில்லை
கண்ணீரில் கருவானேன்
கடல் நீரில் உருவானேன்
உன்னாலே உயிரானேன்
நீயாக நானானேன்…
தாயை விடவும் நல்லவளாய்
தேவதை உன்னைப் பார்த்தேன்
எங்கோ செல்லும் சாலையிலே
உனக்குள் தங்கி விட்டேன்
என்னை யார் என கேட்டால்
ஒரு சொல் போதும்
நீ என நான் சொல்வேன்
என் முகவரி கேட்டால்
ஒரு வரி போதும்
உன் பெயர் நான் சொல்வேன்
உன்னை கடவுள் வந்து கேட்டாலும்
எதிர்ப்பேன் தரமாட்டேன்.....
கோவம் ஓடும் நரம்புகலில்
வீணையை மீட்டுகிறாய்
எரியும் தீயாய் நான் இருந்தேன்
தீபம் ஏற்றுகிறாய்
அட இது வரை இங்கே வாழ்ந்தது போதும்
என நான் இருந்திருந்தேன்
நீ வாழ்க்கையின் சுவயை அறிந்திட வைதாய்
மறுபடி பிறந்துள்ளேன்
உன்னை உயிரின் உள்ளே நான் சுமப்பேன்
வெளியே விட மாட்டேன்........
நீர் துளிகள்.....
நீர் துளிகள் நிலம் விழுந்தால்
பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால்
மௌனம் கூட இசை அமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால்
கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும்
தாகம் இன்னும் அடங்கவில்லை
பாதம் இனைந்து நடக்கும்,
இந்த பயனத்தில் என்ன நடக்கும்?...
வானம் திறக்கும் வரைக்கும்
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்...
மழைத்துளி பனித்துளி கறைந்த பின்னே
அது மறுபடி இரண்டென பிரிந்திடுமா?....
பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால்
மௌனம் கூட இசை அமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால்
கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும்
தாகம் இன்னும் அடங்கவில்லை
பாதம் இனைந்து நடக்கும்,
இந்த பயனத்தில் என்ன நடக்கும்?...
வானம் திறக்கும் வரைக்கும்
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்...
மழைத்துளி பனித்துளி கறைந்த பின்னே
அது மறுபடி இரண்டென பிரிந்திடுமா?....
மழை நின்ற....
மழை நின்ற பின்பும் தூரல் போலஉன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உன்னை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கும் பெருமைக் காட்டுமா?...
எனக்குள் இதையம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா?...
உறவு.........
உறவு பிரியும் நேரமே கொடுமையானது....
அதனால்தான் கடவுள் ஓர் உயிரையும்,
பல உறவுகளையும் கொடுத்திருக்கிறான்.....
மறக்கமுடியாத உறவுகளில் நீயும் ஒன்று !!!
அதனால்தான் கடவுள் ஓர் உயிரையும்,
பல உறவுகளையும் கொடுத்திருக்கிறான்.....
மறக்கமுடியாத உறவுகளில் நீயும் ஒன்று !!!
அன்பு.........
நேரில் மிதந்தாலும்....
'நிலா' என்றும் அழகுதான்...
அருகில் இருந்தாலும்....
தொலைவில் இருந்தாலும்...
உங்கள் அன்பும் என்றும் அழகுதான் !!!!
'நிலா' என்றும் அழகுதான்...
அருகில் இருந்தாலும்....
தொலைவில் இருந்தாலும்...
உங்கள் அன்பும் என்றும் அழகுதான் !!!!
Subscribe to:
Posts (Atom)




