இப்பூமியில்
அன்பும் மனித நேயமும்
இன்னும் எங்காவது
மிச்சமுள்ளதா என்று
தேடி அலைகிறதோ
இப்பிஞ்சுப் பாதங்கள்
சொந்த பந்தங்களை
வீடு வாசல்களை துறந்து
இடம்பெயர்ந்து அகதியாய்
வாழ ஓரிடம்
தேடி அலையும்
இலங்கைத் தமிழனின்
தொலைந்து போன வாரிசோ....
மதவெறி பண வெறி
ஆதிக்க வெறியில்
அழிந்து அடங்கியது
மனித இனம்
பூமியின்
ஒற்றையடிப் பாதையில்
விடியலைத் தேடும்
சின்ன்ஞ்சிறு ஜீவனின்
நம்பிக்கை நடைப் பயணம்..........
No comments:
Post a Comment