Pages

10 April 2009

திருமண அளைப்பிதழ்



கண்ணிமைகள் கை தட்டியே
உன்னை மெல்ல அலைக்கிறதே,
உன் செவியில் விழ வில்லையா?
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே...
உன் அருகில் நான் இருந்தும்
உண்மை சொல்ல துணிவு இல்லை...
கைகளிலே விரல் இருந்தும்,
கைகல் கோர்க முடியவில்லை.........
உன்னை எனக்குப் பிடிக்கும்,
அதை சொல்வதில் தானே தயக்கம்...
நீயே சொல்லும் வரைக்கும்,
என் காதலும் காத்து கிடக்கும்...
தினம் தினம் கனவினில் வந்து விடு,
நம் திருமண அழைப்பிதள் தந்து விடு....

அம்மா.........



தாயே நீ கண்ணுரங்கு
என்னோட மடி சாய்ந்து
வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சொர்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் வாழ்கிறதே
வேர் இல்லாத மரம் போல் என்னை

நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிர் நோகத் துடித்தாயே
உலகத்தில் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லித் தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழி நடத்திச் சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயை மாறிட வேண்டும்

தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்

நோய் தீர்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின் மேலே
சுழலாத பூமியும் நீ
இறைவா....
நீ அணையிடு
தாயே எந்தன் மகளாய் மாற......

நடைப் பயணம்..........

இப்பூமியில்
அன்பும் மனித நேயமும்
இன்னும் எங்காவது
மிச்சமுள்ளதா என்று
தேடி அலைகிறதோ
இப்பிஞ்சுப் பாதங்கள்

சொந்த பந்தங்களை
வீடு வாசல்களை துறந்து
இடம்பெயர்ந்து அகதியாய்
வாழ ஓரிடம்
தேடி அலையும்
இலங்கைத் தமிழனின்
தொலைந்து போன வாரிசோ....

மதவெறி பண வெறி
ஆதிக்க வெறியில்
அழிந்து அடங்கியது
மனித இனம்
பூமியின்
ஒற்றையடிப் பாதையில்
விடியலைத் தேடும்
சின்ன்ஞ்சிறு ஜீவனின்
நம்பிக்கை நடைப் பயணம்..........

கேட்டது நீ !!!!


என்னிடம் கதை கேட்டாய்...
நான் கதாசிரியர் ஆனேன்!!!
கவிதை கேட்டாய்...
கவிஞனாகிப்போனேன்!!!
பாடல் கேட்டாய்....
பாடகன் ஆனேன்!!!
இதோ
என் உயிரைக்கேட்கிறாய்
நான் பிணமாகிப்போனேன் !!!!!






உன் பார்வை !!!



உன்னில் என்னைப்பார்த்தேன்
உன் அன்பில்
என் தாயைப்பார்த்தேன்
உன் அறிவுரையில்
என் தந்தையைப்பார்த்தேன்
ஆனால் நீ மட்டும்
என்னைப்பார்க்கிறாய்
இன்றும் ஒரு குழந்தையைப்போல !!!!!




என்னில் நீ !!!


நிலவில் ஒளி உண்டு
பூவில் மணம் உண்டு
தேனில் இனிப்பு உண்டு
கொலுசில் ஒலி உண்டு
சிரிப்பில் அழகு உண்டு
கண்ணில் இமை உண்டு
உன்னில் நான் உண்டு
என்னில் நீ உண்டு !!!!!!



Dream....




கண்ணுக்குத் தூரமாய் நீ இருந்தாலும்
நெஞ்சுக்குள் நீதான் இருக்கிறாய்....
கண்ணுக்குள் காணாமல் போனாலும்
கனவெல்லாம் நீதான் வருகிறாய் !!!!


09 April 2009

அன்பு.....



பூக்களின் வாசம் புடிச்சிருக்கு
நிலவின் ஒளி புடிச்சிருக்கு
பொழியும் மழைச்சாரல் புடிச்சிருக்கு
அதைவிட உங்களுடைய அன்பு ரொம்பப் புடிச்சிருக்கு !!!!